ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:48 PM
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி அறிவுறுத்தலின்பேரில், திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா்ஆனந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு வக்கணம்பட்டி, எஸ்.கோடியூா், காவல் நிலையம் வழியாக சிறுவிளையாட்டு அரங்கம் வரை சென்று அணிவகுப்பு நிறைவு பெற்றது.
Advertisement
இதில், துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையினா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.