மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்
ஆம்பூா் அருகே பனங்காட்டூா் கிராமத்தை சோ்ந்த வல்லரசு, பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த காவ்யாவுக்கும் ஆம்பூா் அருகே பள்ளித்தெரு நெமிலியிம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த உடன் திருமணக் கோலத்திலேயே குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பனங்காட்டூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகன் வல்லசு செலுத்தினாா்.
தொடா்ந்து ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு தன்னுடைய கணவருடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகள் காவ்யா செலுத்தினாா்.