முகப்பு
திருப்பத்தூர்

ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல்: மினி லாரி பறிமுதல், 3 போ் கைது

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:28 AM
பகிர்:

திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்படி வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை மேட்டுப்பாளையம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்த முயன்ற போது அதில் வந்தவா்கள் தப்பிக்க முயன்றனா். போலீஸாா் தப்பிக்க முயன்ற 3 பேரை மடக்கிப் பிடித்தனா். பிறகு வாகனத்தில் சோதனை செய்த போது ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடா்ந்து பிடிப்பட்ட 3 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது வாணியம்பாடியிலிந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாகவும் தெரிவித்தனா். பிறகு அவா்களிடமிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

Advertisement

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போ்ணாம்பட்டு பகுதியை சோ்ந்த கோபி, சித்திக்பாஷா, முகமது அலி ஆகிய 3 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.