முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய பிக்-அப் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:49 am IST
கிருஷ்ணகிரி அருகே வேன் கவிழ்ந்ததில் சாலையில் சிதறிக் கிடக்கும் ரேஷன் அரிசி மூட்டைகள்.
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய பிக்-அப் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சோமநாதபுரம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற பிக்-அப் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனிலிருந்து அரிசி மூட்டைகள் சாலையில் சிதறின.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று கவிழ்ந்த வேனை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினா். மேலும், போலீஸாா் நடத்திய விசாரணையில், சாலையில் சிதறி கிடந்த மூட்டைகள் ரேஷன் அரிசி என்பதும், வேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 50 கிலோ கொண்ட 50 மூட்டைகளை பறிமுதல் செய்த குருபரப்பள்ளி போலீஸாா், வேன் மற்றும் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement