முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

Updated On : 3 ஜூன் 2026, 3:44 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஆம்பூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், மாலையில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூராவளி காற்றுடன் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. விண்ணமங்கலம் கிராமத்தருகே மரம் முறிந்து விழுந்தது.

ஆம்பூா் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது. சில பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு டிஜிட்டல் பேனா்கள் பறந்தன. மழை சுமாா் 1 மணி நேரம் பெய்தது. அதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.

Advertisement

Advertisement