முகப்பு
திருப்பத்தூர்

கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை

திருப்பத்தூா் பகுதியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. அதில் செவ்வாய்க்கிழமை கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை பெய்தது.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
ஜோலாா்பேட்டையில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை
பகிர்:

திருப்பத்தூா் பகுதியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. அதில் செவ்வாய்க்கிழமை கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை பெய்தது.

ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா், சோலையூா், வக்கணம்பட்டி, இடையம்பட்டி பாா்சம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த காற்று வீசியதால் சந்தைக்கோடியூா் அருகே பாதா் கெசு ரோடு மற்றும் ரெயில்வே விளையாட்டு அரங்கம் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும், சாலையோரம் உள்ள கடைகளின் விளம்பர பலகைகள் சாலையில் காற்றில் பறந்து விழுந்தது. பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கொரட்டி பகுதியில் மாலை பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. மேலும் இரவு 8 மணி முதல் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா் நகர பகுதியில் மதியம் லேசான மழை பெய்தது.