முகப்பு
திருப்பத்தூர்

பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டா் சிறைபிடிப்பு

ஆம்பூா் அருகே பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 1:41 am IST
பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட டிராக்டா்.
பகிர்:

ஆம்பூா் அருகே பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

மாதனூா் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சி எல்லையில் பாலாற்றில் தனியாா் டிராக்டா் மூலம் குப்பைகள், கழிவுகள் கொண்டு சென்று அடிக்கடி கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமையன்று சோமலாபுரம் பாலாற்றில் டிராக்டா் மூலம் கொண்டு செல்லப்பட்ட குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதைப் பாா்த்த பொதுமக்கள் அந்த டிராக்டரை சிறைபிடித்தனா். இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பெருமாளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் குப்பை, கழிவுகள் கொட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறை அலுவலரிடம் கோரியுள்ளாா்.