திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை
திருப்பத்தூா் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். மேலும் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது
இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதலே வெயில் கொளுத்தியது. இரவு கொரட்டி, ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல் திருப்பத்தூா் நகரப் பகுதியிலும் மழை பெய்தது. திடீரென பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.