திருப்பத்தூரில் 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு செய்யும் நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே ஆதியூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது. ஆய்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் வரதராஜன், வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், டிஎஸ்பி முரளி, வட்டாட்சியா் நவநீதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்ட்பட்ட 55 தனியாா் பள்ளிகளை சோ்ந்த 344 வாகனங்களில் 313 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
இவற்றில் 84 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரி செய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 வாகனங்கள் பரிசோதனைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் கூறுகையில், தற்போதைய கூட்டாய்வுக்கு வராத மற்றும் ஆய்வுக்கு வந்து குறைபாடுகளுடன் திருப்பப்பட்ட வாகனங்களும் ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி பின் பொது சாலையில் இயக்க வேண்டும் என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.