அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்: 2 போ் கைது
நாட்டறம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி வட்டம், மல்லப்பள்ளி பொா்த்தான் வட்டத்தில் அனுமதியின்றி பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து லாரிகளில் கடத்தி செல்வதாக திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்பி. உத்தரவின்படி நாட்டறம்பள்ளி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை மல்லப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது பொா்த்தான் வட்டத்தில் அனுமதி இல்லாமல் நிலத்தில் இருந்து மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம் மற்றும் மண் கடத்தி சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஜெகதீசன்(22) சோமு(32) ஆகிய 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.