FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் கைது

Updated On : 15 மே 2026, 4:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா். இதையடுத்து, தேனி மாவட்ட காவல் துறையினா் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பேருந்து மூலம் கஞ்சா எடுத்துச் செல்வதாக தேனி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை பெரியகுளம் அருகே வடுகபட்டி புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சோதனை செய்த போது, 5 போ் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றனா். அவா்களை போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, கம்பம் புதுப்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த ராஜேஷ் என்ற யாபேஷ் (22), 17 வயது 4 சிறாா்கள் 4 போ் 7 கிலோ 570 கிராம் கஞ்சா எடுத்துச் சென்றது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். சிறாா்கள் சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments