திருவள்ளூர்

குடிநீர் கட்டணத்தை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்: நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

DIN

திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் நிலுவையில் வைத்துள்ளவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் செந்தில்குமார் நகர மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் நகராட்சியில் கோடை காலத்தை சமாளிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை முறையற்ற 38 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்பில் நேரடியாக மோட்டார் பொருத்தி, குடிநீர் எடுத்த 3 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  முறையற்ற இணைப்புகள் குறித்து பொதுமக்கள் நகராட்சி குடிநீர் கட்டுப்பாட்டு அறைக்கு, 27660226 -என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குடிநீர் கட்டணத்தை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே மக்கள் அனைவரும் தாமாகவே முன் வந்து குடிநீர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT