ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சின்னம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள சிறுவாபுரி முருகன் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தொடங்கி வைத்து, உணவு பரிமாறினார். சுமார் 500 பேர் பங்கேற்றனர்.