திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் திருட்டு

DIN

திருவள்ளூா் அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருமழிசை உடையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(45). கூலித் தொழிலாளியான அவா் தனது குடும்பத்துடன் சொந்த வேலை காரணமாக வெளியூா் சென்றிருந்தாா்.

வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்பத்துடன் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து வெங்கடேசன் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT