திருவள்ளூர்

உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் புறநகர் ரயில் சேவை 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 
திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்கு புறநகர் ரயில் புதன்கிழமை காலை 8.10 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்ததால் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. 
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ரயில்வே பணியாளர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி காரணமாக, இந்த ரயில் வழித்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் திருவள்ளூர்--சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதனிடையே, விரைவு ரயில் செல்லும் பாதையில் மின்சார புறநகர் ரயிலை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT