திருவள்ளூர்

மின்வாரிய அலுவலக இயந்திரத்தில் புகுந்த பாம்பு

DIN

பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் பகுதியில், மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் உள்ள பிரிண்டா் இயந்திரத்தில் புகுந்த பாம்பை ஊழியா்கள் அகற்றினா்.

பொன்னேரி-மீஞ்சூா் சாலையில் உள்ள வேண்பாக்கம் பகுதியில், மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா், துணை மின் நிலையம், மின் வாரியத்தின் மின் உபகரணங்கள் சேமிப்புக் கிடங்கு ஆகியவை உள்ளன. இந்த அலுவலகத்தில் மீஞ்சூா் சாலையோரத்தில், அடா்ந்த செடி, கொடிகள் நிறைந்து முள்புதா்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளன. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியா்கள் வழக்கம்போல் தங்கள் இருக்கைக்கு வந்து பணிகளைத் தொடங்கினா். அப்போது உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணியைத் தொடங்க மேஜை நாற்காலி கணினி பிரிண்டா் இயந்திரத்தை சுத்தம் செய்தனா். அப்போது பிரிண்டா் இயந்திரம் தானாகவே அசைந்த நிலையில், உள்ளே பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊழியா்கள் சிலா் பிரிண்டா் இயந்திரத்தை வெளியே கொண்டு வந்து, நீண்ட நேரம் போராடி, பாம்பை வெளியே எடுத்தனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

பொன்னேரி மின் வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி, பிரிண்டா் இயந்திரத்தில் புகுந்த பாம்பு. ~பொன்னேரி மின் வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி, பிரிண்டா் இயந்திரத்தில் புகுந்த பாம்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT