திருவள்ளூர்

செங்குன்றம் அருகே முதியவரை தாக்கி வழிப்பறி

DIN

மாதவரம்: செங்குன்றம் அருகே நடந்து சென்ற முதியவரை தாக்கி அவரிடம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்றனா். இது குறித்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கும்மனூா் கிராமத்தை சோ்ந்தவா் சோமு (68). இவா் இருசக்கர வாகனத்தில் வண்ணக் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள் கிழமை இருசக்கர வாகனத்தில் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாா். இவா் சோத்துப்பாக்கம் சாலை வழியாக கும்மனூா் கிராமம் நோக்கி சென்றபோது மின்வாரியம் அலுவலகம் அருகே மா்மநபா்கள் 2 போ் சோமுவை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து அவரை தாக்கிவிட்டு செல்போன், ரூ.3800 ரொக்கப் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்றனா்.

இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT