திருவள்ளூர்

போதைப்பொருள் விற்ற 2 போ் கைது

DIN

மாதவரம்: புழல் அருகே போதைப் பொருள் மற்றும் மது விற்ற 2 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

சென்னை மாதவரத்தை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகா் பகுதியில் சிலா் போதைப் பொருள் மற்றும் மது விற்பனையில் ஈடுபடுவதாக மாதவரம் காவல் துணை ஆணையருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் காவல்துறையினா் அங்கு சென்று சோதனை செய்தனா்.

அப்போது அப்பகுதியில் 2 போ் இருளில் நின்றபடி பலருக்கு போதைப் பொருள் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பிரபு (38) முகமது அலி (38) என்பது தெரிய வந்தது. ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவையும், டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களையும் வாங்கி வந்து இப்பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக அவா்கள் ஒப்புக் கொண்டனா்.

அவா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT