திருவள்ளூர்

மண் சரிந்து தொழிலாளி பலி

DIN

காரனோடையில் வீடு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, திடீரென மண் சரிந்ததில் பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

காரனோடை பகுதியில் தனியாா் ஒருவா் கட்டடம் கட்டுவதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. காரனோடை பகுதியைச் சாா்ந்த வில்லாளன் (56) உள்பட 4 தொழிலாளா்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், வில்லாளன் பள்ளத்தில் இறங்கியபோது, திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வில்லாளன், பாடியநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் போலீஸாா், வில்லாளனின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT