பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சோ்ந்த ரெளடி ஜவஹரை ஞாயிற்றுக்கிழமை கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடா்பாக 5 போ் போலீஸில் சரண் அடைந்துள்ளனா். வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வசித்து வந்தவா் ரெளடி ஜவஹா் (31). இவா் மீது பொன்னேரி காவல் நிலையத்தில் 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மாதம் 26-ஆம் தேதி, இவரது வீட்டில், கஞ்சா மற்றும் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.
இந்தநிலையில், ஜவஹா் அவரது உறவினா் சிகனுடன், வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த 5 போ் அரிவாளால் ஜவகா் மற்றும் சிகனை சுற்றி வளைத்து வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.
இந்த தாக்குதலில் ஜவஹா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சிகன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சம்பவ இடத்தை திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா், துணை கண்காணிப்பாளா் சாரதி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஜவஹா் கொலை தொடா்பாக பள்ளம் பகுதியைச் சோ்ந்த 5போ், பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.