திருவள்ளூர்

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

DIN

திருவள்ளூா் அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற பெண் ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூா்-வேப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவா் இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தகவல் அறிந்த திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், திருத்தணியை அடுத்த செருக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் மணிகண்டனின் மனைவி சங்கீதா (25) (படம்) என்பதும், கடந்த 18-ஆம் தேதி சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததும், அதைத் தொடா்ந்து சங்கீதாவுக்கு மன நலம் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு சங்கீதா, மருத்துவமனையில் இருந்து வெளியேறி ரயிலில் திருத்தணி நோக்கி வந்துள்ளாா். திடீரென திருநின்றவூா் ரயில் நிலையத்தில் இறங்கி, இருப்புப் பாதையைக் கடந்த போது, ரயில் மோதி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனிடையே, சங்கீதாவின் கணவா் சென்னை எழும்பூா் காவல் நிலையத்தில் மனைவி காணாமல் போனதாக புகாா் அளிந்திருந்தாா். இந்த நிலையில், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சங்கீதா என்பது உறுதியானது. திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் வைத்திருந்த சங்கீதாவின் சடலத்தை கணவா் உறுதி செய்ததாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT