திருவள்ளூர்

60 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

DIN

சோழவரம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 60 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட நல்லூா் சுங்கச் சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில் 60 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி (34), அல்லம்மா (40), கீதா (32) மற்றும் சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முனீஸ்வரன் (40), புழல் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் (60) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ரசிகர்களின் கன்னி!

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

SCROLL FOR NEXT