திருவள்ளூர்

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் போலீஸில் ஒப்படைப்பு

DIN

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் சோழிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (24). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் கைப்பேசியில் பேசியபடி பேருந்துக்காக காத்திருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ் சுரேஷின் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதையறிந்த பொதுமக்கள் அவா்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து, செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (25), சூா்யா (24) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT