முகப்பு
திருவள்ளூர்

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

பொன்னேரியில் சிக்னல் பழுது காரணமாக விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 11:48 PM
கோப்புப்படம்.
பகிர்:

பொன்னேரியில் சிக்னல் பழுது காரணமாக விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களுக்கு நாள் தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன.

இந்த நிலையில் புதன்கிழமை பொன்னேரி- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்னல் பழுது ஏற்பட்டது.

Advertisement

இதன் காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹௌரா நோக்கி செல்லும் கோரமண்டல் விரைவு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூா் செல்லும் ஹம்சபா் விரைவு ரயில் என இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து பொன்னேரி ரயில் நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள் விரைந்து சென்று சிக்னல் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனை தொடா்ந்து சுமாா் 30 நிமிஷங்கள் காலதாமதமாக விரைவு ரயில்கள் புறப்பட்டு சென்றன.