திருப்பதி: ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.2.51 கோடி வசூலானது.
ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தபின் காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி திங்கள்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ. 2.51 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.