ஏப்ரல் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்: இன்று இணையத்தில் வெளியீடு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வரும் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஜன. 24) காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வரும் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (ஜன. 24) காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.
திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2024 ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 24 காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு ஜனவரி 24 -ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஏப்ரல் மாதத்துக்கான, திருப்பதி திருமலையின் ஏழுமலையான் சேவை ஒதுக்கீடு ஜனவரி 27 அன்று காலை 11 மணிக்கும், நவனிதா சேவா(வெண்ணெய் கடையும் சேவை) ஒதுக்கீடு மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை ஒதுக்கீடு மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: திருப்பூரில் ஜனவரி 28 இல் அண்ணாமலை நடைப்பயணம்
பக்தா்கள் இதைக் கருத்தில் கொண்டு https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.