முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.78 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.78 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 13 மார்ச் 2026, 12:54 am IST
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.78 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 ரூபாய் விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், புதன்கிழமை முழுவதும் 66,606 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 899 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.78 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.