முகப்பு
திருவண்ணாமலை

ஓய்வூதியர் சங்க பொதுக் குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க வந்தவாசி வட்டக் கிளையின் பொதுக் குழுக் கூட்டம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:44 am IST
பகிர்:

தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க வந்தவாசி வட்டக் கிளையின் பொதுக் குழுக் கூட்டம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க கிளைத் தலைவர் எ.கமாலுதீன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் எஸ்.நடேசன் வரவேற்றார். 
மண்டலச் செயலர் எம்.மணி, மாவட்டத் தலைவர் எம்.கே.கோவிந்தசாமி, அமைப்புச் செயலர் கே.அப்துல்மஜீத், துணைத் தலைவர்கள் பி.மணி, கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். வந்தவாசி நகரில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments