மும்பை: ரூ. 1 விற்பனை வதந்தியால் வணிக வளாகத்திற்கு வெளியே கூடிய பெருங்கூட்டம்
மும்பையில் ஆடைகளை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பரவிய வதந்தியால் வணிக வளாகத்திற்கு வெளியே பெருங்கூட்டம் கூடியது.
மும்பையில் ஆடைகளை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பரவிய வதந்தியால் வணிக வளாகத்திற்கு வெளியே பெருங்கூட்டம் கூடியது.
மகாராஷ்டிர மாநிலம், வணிக வளாகத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் விளம்பர சலுகையாக ஆடைகளை 1 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கூறி விடியோ பலரால் பகிரப்பட்டது.
இதனால், கடை திறப்பதற்கு முன்பே ஏராளமான வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்திற்கு வெளியே கூடினர் என்று பாங்கூர் நகர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
Advertisement
Advertisement
நெரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் போலீஸார் தலையிட்டு, தள்ளுபடி சலுகை எதுவும் இல்லை என்று அறிவிப்புகள் மூலம் தெளிவுபடுத்தினர்.
அதன்பிறகே கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
A social media rumour about a clothing outlet selling outfits for Rs 1 led to a stamped-like situation outside a mall in suburban Malad on Saturday morning but there was no untoward incident, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.