திருவண்ணாமலை

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 
இதில், புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
இதேபோல, செங்கம் பேரூராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் செங்கம் மேல்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பேரூராட்சிப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT