திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

DIN

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) ஆ.மூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019 - 20ஆம் கல்வியாண்டில் பி.ஏ, பி.எஸ்.சி,  பி.சி.ஏ, பி.காம்., போன்ற இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் (ஏப்.22) வழங்கப்பட உள்ளன. 
கல்லூரி அலுவலகத்தில்  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரூ.50 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி, எஸ்.டி மற்றும் எஸ்.சி(ஏ) பிரிவுகளைச் சேர்ந்த 
மாணவர்கள் ஜாதிச் சான்று சமர்ப்பித்து ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெறலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 6 என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT