திருவண்ணாமலை

திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா

DIN


செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை நடைபெற்றது.  
திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் சாற்றி பெண்கள் வழிபடுவது வழக்கம். அதன்படி, செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 
விழாவை முன்னிட்டு 108 யாகம் வளர்க்கப்பட்டு, சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஸ்ரீபாலகுஜாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சுக்கரவாரத்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
அப்போது, பெண்கள் அம்மனுக்கு வளையல்களை சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT