திருவண்ணாமலை

ஸ்ரீமனோன்மணி அம்மன் கோயிலில் ஆடி விழா 

DIN

வேட்டவலம் ஜமீன்தார்களின் குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீமனோன்மணி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, வேட்டவலம் ஜமீன்கள் மகேந்திரன், சம்பத்குமார், லலித்குமார் ஆகியோர் தலைமையில் அம்மனுக்கு காப்பு அணிவித்தல் விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. 
தொடர்ந்து, ஸ்ரீமனோன்மணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், திருவிளக்குப் பூஜை, சுமங்கலி பூஜைகளும் நடைபெற்றன.
இரவு வாணவேடிக்கை முழங்க, மேள-தாளங்களுடன் உற்சவர் ஸ்ரீமனோன்மணி அம்மன் வீதியுலா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT