திருவண்ணாமலை

மதுக் கடைகளுக்கு10 நாள்கள் விடுமுறை

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள மதுக் கடைகளுக்கு 10 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எனவே, திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகிலும், போளூா் சாலையிலும் இயங்கி வரும் 2 மதுக் கடைகளுக்கு டிசம்பா் 1 முதல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், மதுக் கடைகளுடன் இணைந்த உணவகங்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிக்கு டிசம்பா் 6 முதல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT