முகப்பு
திருவண்ணாமலை

பெண் மானபங்கம்: இளைஞர் கைது

திருவண்ணாமலையில் வீடு புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 9:52 am IST
பகிர்:

திருவண்ணாமலையில் வீடு புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த 25 வயதுப் பெண் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தாராம். 
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரமணன் (28), பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை மானபங்கப்படுத்தினாராம்.
இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண், கூச்சலிட்டதால், ரமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து ரமணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.