முகப்பு
திருவண்ணாமலை

மட்டபிறையூரில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

சேத்துப்பட்டு    ஒன்றியம், மட்டபிறையூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி 2019, 9:49 am IST
பகிர்:

சேத்துப்பட்டு    ஒன்றியம், மட்டபிறையூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்கள் குடிநீர்ப் பிரச்னை, தெருவிளக்கு, கால்வாய், நூலகம் அமைக்க வேண்டும், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும், கிராமத்தில் துணை சுகாதார நிலையம் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ கே.வி.சேகரன் பேசியதாவது: மட்டபிறையூர் ஊராட்சியில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வேன். மேலும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலர் பி.மனோகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.