திருவண்ணாமலை

மாயமான நரிக்குறவ மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு 

DIN

வந்தவாசி அருகே காணாமல் போன நரிக்குறவ மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
 வந்தவாசியை அடுத்த தெள்ளாறு நரிக்குறவ சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி கிளஞ்சியம்மாள் (80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வளையல் வியாபாரம் செய்வதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
 இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி அருகே உள்ள கிணற்றில் கிளஞ்சியம்மாள் சடலமாக கிடந்ததைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் தெள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
 இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது உறவினர் மனோகரன் அளித்த புகாரின் பேரில் தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT