திருவண்ணாமலை

திராவிட இயக்கத் தமிழர் பேரவை கிளை தொடக்கம்

DIN

ஆரணியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கிளை திங்கள்கிழமை தொடக்கப்பட்டது.
 அந்த அமைப்பின் மாநில அமைப்புச் செயலர் ப.புலெந்திரன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் எட்வின் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
 கூட்டத்தில் ஆரணி கிளைக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, நகரத் தலைவராக வி.ரவி, நகரத் துணைத் தலைவராக பொன்.சேட்டு, நகரச் செயலராக எ.புகழேந்தி, நகரப் பொருளாளராக துரை.சரவணவேல், துணைச் செயலராக சண்.கதிரவன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைப்பின் பொதுச் செயலர் சுப.விரபாண்டியனின் கருத்தரங்க நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT