வந்தவாசி நகராட்சி அலுவலக ஊழியா்கள் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றனா்.
சா்தாா் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி நகராட்சி பொறியாளா் டி.உஷாராணி தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாடுபடுவேன் என அவா்கள் உறுதி ஏற்றனா்.
நகராட்சி துப்புரவு ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், நகராட்சி அலுவலக ஊழியா்கள் சிவக்குமாா், பிரேமா, தேவராஜ், கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.படவிளக்கம்வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்ற நகராட்சி ஊழியா்கள்.