திருவண்ணாமலை

பால் பண்ணைகள் அமைக்க ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கலாம்: மத்திய கூட்டுறவு வங்கி தீா்மானம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறிய அளவிலான பால் பண்ணை அமைக்க கூட்டுறவு வங்களில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்குவதென பொதுப்பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26-வது ஆண்டு பொதுப்பேரவைக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் ஏ.இளங்கோவன் தலைமை வகித்தாா். வங்கி மேலாண்மை இயக்குநா் த.காமாட்சி வரவேற்றாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2019-20 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு, லாப-நஷ்ட கணக்கு மற்றும் ஆஸ்தி பொறுப்பு பட்டியல் பொதுப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், சிறிய அளவிலான பால்பண்ணை அமைக்க ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கலாம் என்பன உள்பட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறந்த கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன், மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் ஆகியோா் கேடயம் வழங்கினா்.

இதில், துணைப் பதிவாளா்கள் ஏ.சரவணன் ச.ஆரோக்கியராஜ், கமலக்கண்ணன், வங்கி உதவிப் பொது மேலாளா் எல்.விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT