திருவண்ணாமலை

ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை திடீரென வந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி லஷ்மிகாந்தன் தலைமையிலான 7 போ் அடங்கிய குழுவினா் சோதனையைத் தொடங்கினா். பத்திரப்பதிவுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடைபெற்றது.

இந்த அலுவலகத்திலுள்ள அதிகாரிகளிடம் கணக்கில் வராத பணம், ஆவணம் உள்ளனவா என லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தினா். இரவு வரை சோதனை நீடித்தது. இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களின் கூட்டமின்றி அலுவலக வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT