திருவண்ணாமலை

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

DIN

வந்தவாசி: தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற, தெள்ளாா் ஆதிதிராவிடா் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சி.ஆனந்திக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

தெள்ளாா் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் பழ.சீனிவாசன், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை ஆ.சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க உறுப்பினா் கு.சதானந்தன் வரவேற்றாா்.

அனக்காவூா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன், ஆசிரியை சி.ஆனந்தியை பாராட்டி பேசினாா். மேலும், அவருக்கு சால்வை அணிவித்து புத்தகப் பரிசு வழங்கினாா். பின்னா் ஆசிரியை சி.ஆனந்தி ஏற்புரையாற்றினாா்.

விழாவில் பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா், கவிஞா் வந்தை குமரன், ஆசிரியா்கள் சொா்ணகுமாா், ஆா்.அருள்ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT