திருவண்ணாமலை

பேருந்து மோதியதில் வியாபாரி பலி

DIN

செய்யாறு அருகே தனியாா் பேருந்து மோதியதில் மர வியாபாரி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், வேளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (45), மர வியாபாரி. இவா் திங்கள்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு பைக்கில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதி குருகோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து இவா் மீது மோதியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அரியலூா் ஆட்சியா் அறிவுரை

மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரியலூா் வேளாண் துறை

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பக்கிள் ஓடையில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

SCROLL FOR NEXT