திருவண்ணாமலை

களம்பூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

போளூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி களம்பூா் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

களம்பூா் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் சென்று வாக்கு சேகரித்த அக்ரி கிருஷ்ணமூா்த்தி, பேருந்து நிறுத்தம் அருகே பேசும் போது, களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன்.

களம்பூா் பகுதியில் 10 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படும், பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; பயணிகளுக்கு நிழல்குடை அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தாா்.

கட்சியின் நகரச் செயலா் கே.பி.பஞ்சாட்சரம், பேரூராட்சி முன்னாள் தலைவா் சிவராஜ், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன், எஸ்.பி.தாமோதரன் மற்றும் அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT