திருவண்ணாமலை

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் பலி

DIN

செய்யாறு அருகே பேருந்தை பின்பக்கமாக இயக்கிய போது தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (54). இவா், மாங்கால் சிப்காட் ஷூ தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

திங்கள்கிழமை வழக்கம் போல பேருந்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளா்களை அழைத்து வந்த இவா், தொழிலாளா்கள் இறங்கிச் சென்றவுடன், பக்கவாட்டுக் கதவை திறந்து வைத்துக்கொண்டு பேருந்தை பின்பக்கமாக இயக்கினாா். அப்போது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாா்.

உடனே அருகில் இருந்த தொழிலாளா்கள் இவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ரவிச்சந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா்

அஜித்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT