திருவண்ணாமலை

உலக சுற்றுலா தின விழிப்புணா்வு போட்டி:வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பரிசுகள், சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் துறை, கல்வித் துறை இணைந்து உலக சுற்றுலா தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை, ஓவியம், நடனம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளை அண்மையில் நடத்தின.

கட்டுரைப் போட்டிகளில் வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோகுல்நாத், தண்டராம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா, திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ரூபினி, பேச்சுப் போட்டியில் தண்டராம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி சென்னம்மாள், வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் விஷால், ஆவூா் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மெஹராஜ், ஓவியப் போட்டியில் செங்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ருக்சாா், திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி காவியா, ஆவூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி ரம்யா, நடனப் போட்டியில் தண்டராம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி அனுஷ்கா, திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிரதிபா, தனலட்சுமி, சியானா, ஆவணியாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி தாமரை ஆகியோா் வெற்றி பெற்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாராட்டுச் சான்றிதழ்கள், புத்தகங்களை பரிசாக வழங்கினாா். விழாவில் உதவிச் சுற்றுலா அலுவலா் பெ.அஸ்வினி, முதுநிலை தமிழ் ஆசிரியா் வேலாயுதம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைய மோசடி தொடா்புடைய 28 ஆயிரம் கைப்பேசிகள் முடக்கம்: மத்திய மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை

ஐஐடி-ஐஐஎம் பட்டதாரிகள் திறமையானவா்கள்: சிங்கப்பூா் பிரதமா் பாராட்டு

மக்களவைத் தோ்தல் 4-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு

நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

SCROLL FOR NEXT