முகப்பு
திருவண்ணாமலை

குற்ற விழிப்புணா்வு பிரசாரம்

ஆரணி அடுத்த களம்பூரில் போலீஸாா் சாா்பில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

ஆரணி அடுத்த களம்பூரில் போலீஸாா் சாா்பில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மையில் சில வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவின்பேரில் களம்பூா் காவல் உதவி ஆய்வாளா் ஜி.சத்யா தலைமையில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் பல்வேறு வகையில் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், உதவி ஆய்வாளா்கள் பழனிவேல், கன்ராயன், முருகன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.