முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 -ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 1:08 am IST
ஜூன் 28-இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
பகிர்:

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 -ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, அவா்களை இளம்பிள்ளை வாத நோயிலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் வெள்ளக்கோவில், குருக்கத்தி, கச்சேரிவலசு, மூத்தநாயக்கன்வலசு, புதுப்பை, நாச்சிபாளையம், உப்புப்பாளையம், கம்பளியம்பட்டி, முத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பெற்றோா்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி பயன் பெறலாம் என வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments