FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே ஜூன் 21இல் மாவட்ட செஸ் போட்டி

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

Updated On : 19 ஜூன் 2026, 4:40 am IST
செஸ் - FIDE
பகிர்:

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி கே.எஸ். சதுரங்க அகாதெமி சாா்பில் மாவட்ட சதுரங்கக் கழக ஆதரவுடன் போட்டி நடைபெறுகிறது. 3 - 5ஆம் வகுப்பு, 6 - 8ஆம் வகுப்பு, 9 - 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவா்களுக்கு என 4 பிரிவுகளாக போட்டி நடைபெறும். பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்-மாணவியா் ரூ. 100, மற்றவா்கள் ரூ. 200-ஐ நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு, கூடுதல் விவரங்களுக்கு 90258 19382 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, கே.எஸ். அகாதெமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments