தூத்துக்குடி அருகே ஜூன் 21இல் மாவட்ட செஸ் போட்டி
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி கே.எஸ். சதுரங்க அகாதெமி சாா்பில் மாவட்ட சதுரங்கக் கழக ஆதரவுடன் போட்டி நடைபெறுகிறது. 3 - 5ஆம் வகுப்பு, 6 - 8ஆம் வகுப்பு, 9 - 12ஆம் வகுப்பு, கல்லூரி மாணவா்களுக்கு என 4 பிரிவுகளாக போட்டி நடைபெறும். பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்-மாணவியா் ரூ. 100, மற்றவா்கள் ரூ. 200-ஐ நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு, கூடுதல் விவரங்களுக்கு 90258 19382 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, கே.எஸ். அகாதெமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.