FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் 6ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:57 am IST
சடலம்...
பகிர்:

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் 6ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா். தூத்துக்குடி, காதா் மீரான் நகரைச் சோ்ந்த ராஜசேகா், சுப்புலட்சுமி தம்பதியின் 2ஆவது மகள் பிரியதா்ஷினி (11). இவா் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிரியதா்ஷினி, தண்ணீா் தொட்டி நிரம்பியதால், மின் மோட்டாரை அணைப்பதற்காக பொத்தானை அழுத்தியுள்ளாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சிறுமியின் உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments